ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி…!

Default Image

ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இதுதான் அதிகப்படியானத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க அரசாங்கத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாலச்சந்திரன். இந்தியாவின் தகவல் தொடர்புத்துறையை அதிரவைத்த இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்த ஊழலைப் பணியிலிருக்கும் போதே உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய முக்கிய அதிகாரி பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தற்போது தனது ஓய்வு ஊதியத் தொகையிலிருந்து 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “தமிழ் இருக்கைக்காக எனது ஓய்வு ஊதியத் தொகையிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதி அளித்ததைத் தமிழுக்காகக் கொடுப்பாதாக எண்ணி நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்…நீங்கள்..??

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்