ஸ்டெர்லைட் விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்…!!

Default Image

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் நெமிலியில் காஞ்சி மக்கள் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறினார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதால் தான், ஆளுநர் மவுனம் காப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்