ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்..!

Published by
Dinasuvadu desk

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தி உள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்பிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அமைச்சரவையைக் கூட்டி தமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அரசு தன்நிலையைத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும், கொளத்தூர் தொகுதியில், குடியிருப்புகளை ஒட்டி செல்லும் மின்கம்பிகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதால், புதைவட மின்கம்பிகளாக மாற்ற வேண்டும் எனவும், ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கொளத்தூர் தொகுதியில் தற்போது 10கிமீ அளவிற்கு புதைவட மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதைவட கம்பிகள் அமைக்க தோண்டும் பணிகளுக்கு அதிகத் தொகை செலவிட வேண்டி இருப்பதால், தற்தாலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார். புதைவட மின் கம்பிகள் அமைக்க புதிய நடைமுறை கண்டறியப்பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முடிவடையும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago