ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு! தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

Published by
Venu

ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலக் கிடங்கில் சிறிய கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று  தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து உதவி ஆட்சியர் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் கூட உள்ளே பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படும் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன சேமிப்பகம் ஒன்றில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து ஆய்வு செய்ய உதவி ஆட்சியர் பிரசாத் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, வருவய்த்துறை, காவல்துறையினர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

கசிவு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதனிடையே வல்லுநர் குழுவானது ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்தது.

ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலக் கிடங்கில் சிறிய கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று  தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை, மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  ரசாயன கசிவை சரிசெய்யும் பணி நாளை காலை தொடங்கும் என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago