ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்றும் பணி பிற்பகலில் தொடங்கும்!தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Default Image

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்றும் பணி பிற்பகலில் தொடங்கும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை ரசாயனக் கசிவைக் கண்டறிவதற்காக சார் ஆட்சியர் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது நேற்று மாலை சுமார் அரை மணிநேரம் ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில் கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். கசிவினால் ஆபத்து ஏதும் இல்லை என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்றும் பணி பிற்பகலில் தொடங்கும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும்  கந்தக அமிலத்தை அகற்றும் வழிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடக்கிறது என்றும்  தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்