தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் ஸ்டெர்லைட் அறிக்கையை ஏற்கக்கூடாது என த்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமத்தினர் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை நியமித்தது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழுவினர், முன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது தவறு என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் , ஆலை தொடர்பாக ஆய்வு செய்து தங்களது பரிந்துரைகளை மட்டுமே ஆய்வுக்குழு அளிக்க முடியும். தவிர ஆலையை திறக்க கட்டளையிட அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அறிக்கையை ஏற்கக் கூடாது என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
dinasuvadu.com
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…