ஸ்டாலின் எத்தனை இடங்களை ஆய்வு செய்தார்? ….முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…!!

Published by
Dinasuvadu desk

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.

கஜா புயல் சேதங்களை விளக்கிக் கூறி நிவாரணம் வழங்கக்கோரி டெல்லியில் பிரதமர் மோடியை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, உடனடியாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
கஜா புயலுக்கு 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வர்தா புயல் பாதிப்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சுமார் அரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.சாலை மார்க்கமாக ஆய்வு மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எத்தனை இடங்களில் ஆய்வு செய்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்தபின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago