ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் வீரத் தியாகிகள் என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அந்தப் புத்தகத்தை வெளியிட்டார். 6 ஆயிரத்து 119 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லையை ராணுவ வீரர்கள் காப்பது போன்று, உள்நாட்டில் காவலர்கள் சிறப்பாக பணியாற்றுவதாக பாராட்டினார். தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்வதாக குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரும் சாதனை படைக்க பிறந்துள்ளதாகவும், அதற்கான திறமை நம்மிடம் உள்ளதென்றும் முதலமைச்சர் தெரிவித்தார். காவல்துறையில் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட்டு வருவதாக கூறிய அவர், தற்போது 5 சதவிகித பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக விளக்கம் அளித்தார்.
DINASUVADU.COM
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…