வேளாண்துறை சார்பில் 127 கோடியே 45 லட்சம் மதிப்பில் பல திட்டங்கள் : எடப்பாடி ..!

Published by
Dinasuvadu desk

வேளாண்துறை சார்பில் 127 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 90விழுக்காடு மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் நடப்பாண்டில் ஐம்பது கோடி ரூபாய் செலவில் ஆயிரம் சூரியசக்தி மோட்டார் பம்புசெட்டுகள் நிறுவப்படும் எனத் தெரிவித்தார். சிறுதானியங்களின் உற்பத்தியை உயர்த்த 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

வாழை பயிரிடும் நிலத்தில் நுண்ணீர்ப் பாசன முறை அமைக்க விவசாயிகளுக்கு 27 கோடியே 83 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தோட்டக்கலை ஆராய்ச்சி பயிற்சி மையம், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் ஆகியவற்றில் தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு தொடங்கப்படும் என்றும், இவ்விரண்டு மையங்களிலும், கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

9 வட்டாரங்களில் 18 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி எனும் புதிய பூங்கா 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். நீலகிரியில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் 3கோடி ரூபாய் செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கைத்தறித் துறை சார்பில் கோவை கொடிசியா அரங்கில் 2கோடி ரூபாய் செலவில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

37 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

46 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

55 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

1 hour ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago