வேலூர் அருகே கார் ஏற்றி இளம் பெண் கொலை! விபரீத காதலால் நிகழ்ந்த பரிதாபம்!

Published by
Venu

கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  காதலன் கார் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபரீத காதலால் நிகழ்ந்த பரிதாபம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், பெங்களூருவில் தங்கி பெயிண்டராக வேலைப்பார்த்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் சனிக்கிழமை காலை தனது மனைவியுடன் குடியாத்தத்திற்கு இரு சக்கர வாகனத்தில் மணிகண்டன் சென்றார்.

மோடிக்குப்பம் என்ற ஊருக்கு அருகே சென்ற போது,இரு சக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் அதி வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது. இதில் சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை சுற்றி வளைத்து தாக்கிய பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் ஓட்டி வந்த காரின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினரின் விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் சுமதியின் முன்னாள் காதலன் வசந்த் என்பதும் இது விபத்து அல்ல, திட்டமிட்ட படு கொலை என்பதும் தெரியவந்தது.

மணிகண்டன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்ததால், வீட்டில் தனியாக வசித்து வந்த சுமதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வந்த உறவுக்கார இளைஞர் தான் வசந்த்..! சொக்க வைக்கும் பேச்சால் சுமதியை மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

கணவர் மணிகண்டன் ஊரில் இல்லாத நேரம் வசந்துடன் காரில் சுற்றிய சுமதி, விஷசெடியான அந்த விபரீத காதலை வளர்த்ததாக கூறப்படுகின்றது. இவர்களது காதல் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு தெரியவந்தது. அப்போது தனது தவறை உணர்ந்த சுமதி, கணவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரது அறிவுரையை ஏற்று காதலன் வசந்தை சந்திப்பதையும், பேசுவதையும் நிறுத்திக்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago