விழுப்புரம்:
ஆண்டுதோறும் ஜுன் 3-ம் நாள் தமிழ் செம்மொழி நாள் என அழைக்கப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம் என்று தெரிவித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடந்து பேசிய அவர் மத்திய அரசையும் விட்டு வைக்கவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றுனீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கடந்த மக்களவை தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…