“வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை” இல்லாமல் அதிமுக ஆட்சி செய்கிறது…!! வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..!!

Default Image

விழுப்புரம்:

ஆண்டுதோறும் ஜுன் 3-ம் நாள் தமிழ் செம்மொழி நாள் என அழைக்கப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம் என்று தெரிவித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Image result for அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டஅதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை என்று ஸ்டாலின் சூளுரைத்தார். மானம் மரியாதையை அடமானம் வைத்துவிட்டு தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலோ ஊழல் என்று கடுமையாக சாடினார். மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசுக்கு பல்லக்கு தூக்கி கொண்டு இருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

Image result for மோடிக்கு

தொடந்து பேசிய அவர் மத்திய அரசையும் விட்டு வைக்கவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றுனீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கடந்த மக்களவை தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்