‘வெட்கப்படாமல் வாக்காளர்கள் காலில் விழுந்துவிடவேண்டும்!’ – அமைச்சர் செல்லூர் ராஜுவின் ருசிகர பேச்சு!

Default Image
  • மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • அப்போது பேசிய செல்லூர் ராஜூ   வாக்காளர்களிடம் சென்று எனக்கு ஒட்டு போடுங்க , ஆளுங்கட்சி நாங்க , கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும்

மதுரையில் திமுக மற்றும் அமமுக கட்சியில் இருந்து விலகிய 500 மேற்பட்டவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல மதுரை மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய  கூட்டுறவு துறை  அமைச்சர் செல்லூர் ராஜூ , “வெற்றி என்பது உங்கள் கை மேல் இருக்கிறது. அதை  சாப்பிட வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. மேலும் வாக்காளர்களிடம் சென்று எனக்கு ஒட்டு போடுங்க , ஆளுங்கட்சி நாங்க , கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும்” என அதிமுகவினருக்கு அறிவுரை கூறினார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்