ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதியை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பின்பற்றவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை – நத்தம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக பழமை யான மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிரான வழக்கில் மரங்களை மாற்று இடங்களில் நடவு செய்ய பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்துள்ள நிலையில் மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாகக் கூறப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதிக்க மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழிச்சாலைக்காக எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டதாகவும், ஆனால் ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதி முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒப்பந்தப்படி குறிப்பிட்ட மரங்களை மட்டும் தான் வெட்டுவோம் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…