வீட்டு வாடகை தொடர்பான பிரச்சனையில் சென்னையில் மூதாட்டியை வீட்டினுள் வைத்து உரிமையாளர் பூட்டிச் சென்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு, காசிமாநகரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் வீட்டில், பாப்பாத்தி என்ற 65 வயது மூதாட்டி வசிக்கிறார். வாடகை கொடுப்பது தொடர்பாக ரங்கநாதனுக்கும் பாப்பாத்திக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே காலையில் வழக்கம் போல முதல் மாடியிலிருக்கும் தனது வீட்டிலிருந்து இறங்கி வந்த பாப்பாத்தி கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து தனது உறவினரான விஜயா என்பவருக்கு போன் செய்து உதவுமாறு கேட்டுள்ளார். இது தொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற காசிமேடு போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டி பாப்பாத்தியை மீட்டனர். வீட்டின் உரிமையாளர் ரங்கநாதன் வெளியூர் சென்றுவிட்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…