வீட்டு உரிமையாளரிடம் 12½ பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..!

Published by
Dinasuvadu desk

பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகரில் உள்ள வெற்றி நகரில் வசித்து வருபவர் ஆதிகேசவன்(வயது 50). இவர் சூளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாம்பாள் (48). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான இளமதி(33) என்பவர் தனது மனைவி சிவகலாவுடன்(27) வாடகைக்கு வசித்து வந்தார்.

இளமதிக்கு சரியான வேலை ஏதும் கிடைக்கவில்லை. மேலும், வீட்டில் தண்ணீர் வசதி இல்லை எனவும் கூறிய அவர் வீட்டை காலி செய்வதாக உரிமையாளரிடம் தெரிவித்து வீட்டின் உள்ள பொருட்களை சாக்கு பையில் வைத்து கட்டினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதில் பாதியளவு பொருட்களை தனது உறவினரான கொளத்தூர் ஜி.கே.எம். காலனி ஜம்புலிங்கம் தெருவில் வசிக்கும் புஷ்பா(60) என்பவரின் வீட்டிற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 12½ பவுன் தங்க நகைகள் மாயமானதாக நேற்று முன்தினம் நண்பகல் ரேணுகாம்பாள் திரு.வி.க. நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணியிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பெரவள்ளூர் உதவி கமிஷனர் அரிகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், ரமணி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ரேணுகாம்பாள் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இளமதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மற்ற பொருட்களையும் சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு அவசரமாக புறப்பட முயன்றார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் இளமதியை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை திருடியது அவர்தான் என்பது தெரியவந்தது. ரேணுகாம்பாள் வீட்டின் வெளியில் துணி துவைத்து கொண்டு இருந்த வேளையில் நைசாக வீட்டுக்குள் நுழைந்த இளமதி பீரோவில் இருந்த நகையை திருடி உள்ளார்.

பின்பு சாக்கு மூட்டையில் பொருட்களை கட்டியபோது அதில் நகையை வைத்து உறவினர் புஷ்பா வீட்டில் கொண்டு வைத்ததும் தெரியவந்தது. ஆனால் அந்த மூட்டையில் நகை இருந்தது புஷ்பாவுக்கே தெரியாது. இதனைத் தொடர்ந்து புஷ்பாவிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த போலீசார் நகையை திருடிய இளமதியை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago