விஷால் மனு நிராகரிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Default Image

ஆர்கே நகர் இடைதேர்தலில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளில் நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று அவரது வேட்புமனு தாக்கலானது பரிசீலனை செய்யப்பட்டது.அவரது வேட்புமனுவில் அவரை முன்மொழிந்த 10 ஆர்கே நகர் வாக்காளர்களில் 2 வாக்காளர்கள் தங்களது கையெழுத்து போலி என கூறியதால் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது.

மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் எனக்கூறி அவரது வேட்புமனு செல்லாது எனகூறி தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம் இதனையடுத்து,தனக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட நபரது குடும்பத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக நான் எனது கையெழுத்து போலி எனக்கூறி எழுதி கொடுக்க வேண்டிய நிலை வந்தது என அந்த நபர் போனில் வாக்குமூலம் அளித்தையோட்டி மீண்டும் விஷாலின் வேட்புமனு ஏற்பதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனிடையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாக  தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்