24 வயது இளைஞர் ஒருவர் விருதுநகரில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரின் மகன் மைதீன், அடிதடி வழக்கு ஒன்றில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், விருதுநகர் முத்துராமன் பட்டியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைக் கண்டு களித்த மைதீன், புகைப்பிடிப்பதற்காக மறைவான இடத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவரைப் பின் தொடர்ந்த மர்ம கும்பல், மைதீனை அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது. உடலில் 14 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில், மைதீன், விருதுநகர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி மைதீன் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…