வேலூர் மாவட்டம் கள்ளரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 27 பேர், ஆந்திர மாநிலம், குப்பம் அருகேயுள்ள கிராமத்திற்கு மாங்காய் பறிக்கும் வேலைக்குச் சென்றிருந்தனர். பணி முடிந்ததும், மாங்காய் லோடு ஏற்றிச் சென்ற லாரியிலேயே 27 பேரும் பயணித்துள்ளனர்.
தமிழக-ஆந்திர எல்லையான பெரும்பள்ளம் என்ற பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, 70 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரியில் பயணம் செய்த கூலித்தொழிலாளிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 19 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது ஆந்திராவில் விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டம் கல்நார்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. காயமடைந்த 22 பேருக்கு நல்ல முறையில் சிகிச்சை தர வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…