விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆறுதல் …!!

Published by
Dinasuvadu desk

`நாங்க இருக்கேன்  விஜய்!’ கவலைய விடுங்க  ரஜினி ஆறுதல்…

சென்னை ,

இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.

சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு தப்பி செல்ல முயன்ற அபிராமியை காவல்துறையினர் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய்

அப்போது, விஜய்யின் கைகளைப் பற்றிக்கொண்டு, “எந்த ஆறுதலும், இந்தக் கொடிய நிலைமைக்கு மருந்தாகாது. மீண்டு வாருங்கள் விஜய்; ஆண்டவன் துணை இருப்பான். நாங்க இருக்கோம்” என்று கலங்கிய கண்களுடன் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியைக் கண்டதும் விஜய் மனக்குமுறலால் உடைந்து அழுதுள்ளார். இது தொடர்பாக விஜய்யிடம் பேசுகையில்,“நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதே போல என்னுடைய குழந்தைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே பேசும், சைகைகளைச் செய்து காட்டும்” என்று உடைந்த குரலில் பேசினார் விஜய்…

DINASUVADU 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago