வாக்கு எண்ணிக்கை வீடியோ – தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு

Default Image
  • உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவு பிரதியை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும் 13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில்,7000க்கும் அதிகமான சிசிடிவி பதிவுகளை பதிவிறக்கம் செய்ய 15 நாள் அவகாசம் தேவை என்று ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ,ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை  நிராகரித்தது   நீதிமன்றம். சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய ஆகும் தாமதத்திற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று தெரிவித்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen