உயர் நீதிமன்றம் ,வருமானத்தை மறைத்ததாக நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
2010-11ஆம் நிதியாண்டில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாக கூறி, திரிஷாவுக்கு வருமான வரித்துறை ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. 2010-11ஆம் நிதியாண்டில் திரைப்படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை, 2012-13ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வருமான வரி கணக்கில் காட்டியதாகவும் அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை ஆணையரிடம் திரிஷா தரப்பில் முறையிடப்பட்டது.
இதை ஏற்று, திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டார். வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து, வருமானவரித்துறை முதன்மை ஆணையர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தது சரிதான் என தீர்ப்பளித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…