திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு கொள்ளிடம் ஆறு வறண்டு கிடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மணல் கொள்ளையர்கள், இரவு பகல் பாராது மணலைச் சுரண்டி எடுத்ததாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சுமார் 10 அடி முதல் 15 அடி வரை மணலை சுரண்டி எடுத்ததன் விளைவாகவே பழைய பாலம் இடிந்ததாகக் கூறும் அவர்கள், தற்போது புதிய பாலத்துக்கும் ஆபத்து வந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
கொள்ளிடம் புதுப்பாலம் மட்டுமல்லாது, அனைத்துப் பாலங்களின் உறுதியையும் ஆய்வு செய்து மராமத்துப் பணிகளை செய்ய வேண்டும் என்றும் மணல் சுரண்டலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…