திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு கொள்ளிடம் ஆறு வறண்டு கிடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மணல் கொள்ளையர்கள், இரவு பகல் பாராது மணலைச் சுரண்டி எடுத்ததாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சுமார் 10 அடி முதல் 15 அடி வரை மணலை சுரண்டி எடுத்ததன் விளைவாகவே பழைய பாலம் இடிந்ததாகக் கூறும் அவர்கள், தற்போது புதிய பாலத்துக்கும் ஆபத்து வந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
கொள்ளிடம் புதுப்பாலம் மட்டுமல்லாது, அனைத்துப் பாலங்களின் உறுதியையும் ஆய்வு செய்து மராமத்துப் பணிகளை செய்ய வேண்டும் என்றும் மணல் சுரண்டலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…