வன்னியர் சங்கத் தலைவர்-காடுவெட்டி குரு உடம்நலக்குறைவால் காலமானார்..!!

Published by
kavitha

வன்னியர் சங்கத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

நுரையீரல் தொற்று காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்ட பின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கட்சித் தொண்டர்கள் அஞ்சலிக்குப் பின், காடுவெட்டி குருவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குரு, 2001 மற்றும் 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றவர்.

காடுவெட்டி குரு மறைவு குறித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், கடைசி வரை தனது நம்பிக்கைக்குரிய தளபதியாக காடுவெட்டி குரு திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்கப் பாடுபட்டதாகவும், தன்னை அழைத்து ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்ததாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

24 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago