வங்கி மோசடி:ரூ. 824 கோடி.! கனிஷ்க் நிறுவன உரிமையாளர் கைது..!!

Published by
kavitha

நீரவ் மோடியின் வங்கி மோசடி போல சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824.15 கோடி மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)  சிபிஐயிடம் புகார் அளித்தது.

சென்னை தியாகராய நகரில் ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் இருந்து வருகின்றனர்.  இந்த நிறுவனம் கிரிஸ் என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கியின் ஒப்புதலின் பேரில் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ.50 கோடி கடனை கனிஷ்க் நிறுவனம் வாங்கியது. இந்தக் கடன்களை வைத்து மற்ற வங்கிகளிலும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் கடன் பெற்றுள்ளது. வரவு செலவு கணக்குகளை போலியாக காண்பித்து கிட்டத்தட்ட 14 வங்கிகளில் கனிஷ்க் நிறுவனம் ரூ.714 கோடி ரூபாய் கடன் பெற்றது.

இதில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கி ரூ.214 கோடியும்  பஞ்சாப் நேஷ்னல் வங்கி ரூ.115 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.45 கோடியும் கடன் வழங்கியுள்ளன. இந்த கடன்களுக்கு கொலேட்டரல் செக்யூரிட்டியும் வங்கிகள் பெற்றுள்ளன.

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தக் கடன்களுக்கான வட்டித் தொகையை கனிஷ்க் கோல்டு நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்த நிலையில் நிறுவனத்தை ஆடிட் செய்வதற்கு வங்கிகள் அமைப்பு  சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்து ஆவணங்களும் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐயிடம் வங்கிகள் கூட்டமைப்பு புகார் அனுப்பியது,

இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில்  கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை  அமலாக்கத்துறை முடக்கியது.

இதையடுத்து எஸ்.பி.ஐ உள்ளிட்ட 24 வங்கிகளில் மோசடி செய்த  கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஜூன் 8 வரை காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago