வங்கிகளுக்கு அறிவுரை!கடன்கொடுக்காமல் இருப்பது நல்லது!சென்னை உயர்நீதிமன்றம்

Published by
Venu

சென்னை உயர்நீதிமன்றம் கடனை திருப்பி செலுத்தும் தகுதி இல்லாதவர்களுக்கு கடன்கொடுக்காமல் இருப்பது நல்லது என வங்கிகளுக்கு  அறிவுரை வழங்கியுள்ளது.

தீபிகா என்ற மாணவி  நாகையைச் சேர்ந்தவர் ஆவர்.தமக்கு செவிலியர் படிப்புக்கான கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கி நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், மனுதாரரின் தந்தை ஏற்கெனவே பல முறை கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும், செவிலியர் படிப்பு கல்விக்கடன் திட்ட வரம்புக்குள் வராது எனவும் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதி வைத்தியநாதன் இதைக் கேட்ட பின், அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பலநபருக்கு வங்கிகள் கடன் வழங்கிய பின், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதால், அப்பாவி வங்கி ஊழியர்கள்தான் கடைசியில் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்தார்.

கடனை வசூலிக்க வங்கிகள் கடன்பெற்றோரின் பின்னால்  ஓடுவதை விடுத்து, தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதே நல்லது என அறிவுறுத்தினார். இதையடுத்து, தந்தை பல கடன்களை செலுத்தாத நிலையில் மகளின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே என மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

49 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago