வக்காலத்து மனுக்களை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய அடையாள அட்டை அவசியம்-நீதிமன்றம்

Published by
Dinasuvadu desk

வழக்குகளில் வாதிடுவதற்கான வக்காலத்து மனுக்களை, தங்களது அடையாள அட்டையுடன் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வரதட்சணை வழக்கில் சிக்கிய ஒருவருக்கு அவரை அறியாமலேயே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிலமாதங்களுக்கு முன்னர் நீதிபதி வைத்தியநாதன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது,வழக்கறிஞர்கள் தங்களது பதிவு எண், நிழற்படம் ஆகியவற்றுடன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை திரும்பப்பெற கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, போலி வழக்கறிஞர்களைக் கண்டறிந்து களைவதற்கான ஆலோசனைகளை வழக்கறிஞர்கள் சங்கம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், வழக்கறிஞர்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் வக்காலத்து மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அடையாள அட்டை இல்லாதவர்கள் பார் கவுன்சிலில் விண்ணப்பித்து அடையாள அட்டைகளைப் பெற வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago