லோக் ஆயுக்தா "ரகசிய விசாரணை "விதியை ரத்து செய்ய வேண்டும்…!!அதிமுகாவை காப்பற்றவே லோக் அயுக்தா விதிகள் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!!

Default Image

லோக் ஆயுக்தாவில் ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
லோக் ஆயுக்தாவில் ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச் சாட்டிற்கு ஆளாகியுள்ள முதல்வரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு சாதகமாக லோக் ஆயுக்தாவில் சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளது போல் தெரிவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
Related image
மேலும் லோக் ஆயுக்தாவனது அரசின் நிர்வாகத்தில் வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பையும்  மேற்கொள்ள வேண்டிய வேண்டிய லோக் அயுக்தா அமைப்பு இப்பொழுது  ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என கூறியிருப்பது  கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அவர்  ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் பொதுமக்களும் அறியும்படி  நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட அவர் பவர் இல்லாத லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி 128 நாட்கள் ஆகியும், அதற்குத் தலைவரை நியமிக்காத தமிழக அரசு. ஒருவேளை நியமித்தால் தானும், தன் ஊழல் சகாக்களும் சிக்கிக்கொள்வோம் என அஞ்சுகிறாரா முதல்வர்? தலைவரை நியமிப்பதுடன், ஊழல் செய்ய ஏதுவான ‘ரகசிய விசாரணை’ விதியையும் ரத்து செய்ய வேண்டும்! என ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்