"ரோசம், மானம் இருந்தால்" அரசு அதிகாரிகளை கடுமையாக சாடிய நடிகர் கமல்..!!

Published by
Dinasuvadu desk

சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி்யின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி்யின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்கள் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதில் இன்று மேட்டூர் கெங்கவல்லி மற்றும் அயோத்தியா பட்டினம்,  ஆத்தூர் போன்ற இடங்களில் அவரது பயணத்தில் பேசுகையில்,
நான் இன்று மதியம் மேட்டூர் அணையை பார்வையிட்டு வந்தேன். இந்த பகுதிக்கு வரும்போது மக்கள் என்னிடம் கூறியது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதாக கூறினார்கள். இந்த பகுதியில் உள்ள காவிரி ஆறு கடல் போல் காட்சி அளிப்பதை கண்டு வந்தேன். ஆனால் மக்களுக்கு குடிநீர் பஞ்சம்.இதை யார் சரி செய்வது.நீங்கள் சரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.அது தவறில்லை.  ஆனால்,  இந்த ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளை விரைவுபடுத்தி மக்களுக்கு தேவையான குடிநீர் கொடுத்திருக்கலாம்.    அவர்கள் செய்யவில்லை. ரோசம், மானம் இருந்தால் அவர்கள் செய்யட்டும்.   நாம்தான் செய்ய வேண்டும் என்றால் நாம் செய்வோம் எனக்கூறினார்.
தொடர்ந்து பல ஊர்களில் பேசியா நடிகர் கமல்ஹாசன் புரட்சி புரட்சி என்று பேசினால் மட்டும் போதாது. அந்த புரட்சியை கையில் எடுக்கும் உரிமை மக்களாகிய உங்களிடம் உள்ளது.   ஓட்டுக்காக பணம் வாங்கும் ஒரு சமூக அவலம் நடைபெற்று வருகிறது.  அந்தப்பணம் உங்கள் பையில் இருந்து எடுத்து உங்களுக்கு தேவையான சொர்ப பணத்தை கொடுத்துவிட்டு மீது அவர்கள் பையில் வைத்துக்கொள்கிறார்கள்.   இது கூடாது.  நீங்கள் எல்லோரும் முடிவெடுத்தால் நமக்கான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தலாம் எனக்கூறினார்..
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago