ரூ.824 கோடி வங்கி மோசடி செய்த கனிஷ்க் நகைக்கடை உரிமையாளர் நாட்டை விட்டு தப்பித்து விட்டதாக பரவும் செய்தி!சிபிஐ விளக்கம் …!

Published by
Venu

14 வங்கிகளை 824 கோடி ரூபாய்க்கு  சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம், மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐ-யிடம் 14 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக  புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு உஸ்மான் சாலை பகுதியில் கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தை உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் என்பவர் நடத்தி வருகிறார். இவர், வங்கிக்காக கடந்த 2007ல் ரூ.50 கோடியை  ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு அந்த கடன் தொகையை  எஸ்.பி.ஐ. வங்கிக்கு மாற்றியுள்ளனர்.

எஸ்.பி.ஐ. வங்கியில், தங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் அதிக லாபம் வருவதாகக் கூறி கூடுதலாக கடன் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. எஸ்.பி.ஐ.வங்கி மட்டுமல்லாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிண்டிகேட் வங்கி, உள்ளிட்ட 14 வங்கிகளில் கடந்த 2007 முதல் 2017 வரை ரூ.750 கோடி வரை கடனாக பெற்று ஏமாற்றி வந்துள்ளதும் தற்போது வெளிவந்துள்ளது. .

கடந்த 2017 அக்டோபர் மாதம் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயினை, கலால் வரி கட்டாத மோசடியில் சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரூ.20 கோடி மோசடி செய்ததற்கான காரணம் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போதுதான், கனிஷ்க் நிறுவனத்தின் மோசடி தெரியவந்தது. அவர் வங்கிகளில் பெற்ற கடனுக்கும் வட்டி கொடுக்காமல் ஏமாற்றி வந்த அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

இதன் பின்னரே, கனிஷ்க் நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்ட வங்கிகள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி எஸ்.பி.ஐ. வங்கியின் மத்திய கார்ப்பரேட் குழுவின் சென்னை மண்டல பொது மேலாளர் சந்திரசேகர் தலைமையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்தில் 16 பக்கம்  அடங்கிய புகாரை அளித்துள்ளனர்.

இது குறித்து சந்திரசேகரிடம் கேட்ட போது கனிஷ்க் நிறுவனம் கடந்த ஆறு மாதங்களாக செயல்படவில்லை எனவும், தி.நகரில் அதன் தலைமை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அந்நகைக்கடையின் கிளைகளும் மூடப்பட்டுள்ளது என்றும் கூறினார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஸ்குமார் ஜெயின் ஜீ.எஸ்.டி.துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த பிறகு அவர் எங்குள்ளார் என்ற விவரமும் தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.11,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி போன்று,  சென்னையிலும் அதே பாணியில் பூபேஸ்குமார் ஜெயின் என்பவர் ரூ.824 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கனிஷ்க் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னையில் கனிஷ்க் நிறுவனம் உள்ள இடங்களில் சிபிஐ சோதனை தொடங்கியுள்ளது. மேலும் கனிஷ்க்  நிறுவன இயக்குனர்களுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில்  ரூ.824 கோடி வங்கி மோசடி செய்த கனிஷ்க் நகைக்கடை உரிமையாளர் பூபேஷ் நாட்டை விட்டு தப்பித்து விட்டதாக பரவும் செய்திகள் தவறானது என்று  சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது .*பூபேஷை நேற்று மாலையில் இருந்து சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள கனிஷ்க் நகை நிறுவன அதிபர் பூபேஷ்குமார் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது எஸ்பிஐ வங்கி. நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள பூபேஷ்குமார் வீட்டில் ஏலம் தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

30 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

32 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago