ரூ. 24.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்!
இருபத்து நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளில் சந்தேகத்திற்கிடமான ஒருவரிடம் சோதனை நடத்தினர். அப்போது, அந்த பயணியின் உடைமைகளில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க கம்பிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 795 கிராம் எடைகொண்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹலீம் என்பது தெரியவந்தது.