காவேரி என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டஅள்ளி அருகே உள்ள பஞ்சாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர். கூலித் தொழிலாளியாக இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 6 வயதான தனது கடைசி மகனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மன்னன் நகரை அடுத்துள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு 4 ஆண்டுகளுக்கு காவேரி குத்தகைக்கு கொடுத்துள்ளார். அந்த சிறுவனை வடிவேல் ஆடு மேய்க்க பயன்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாவுக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், 15 ஆயிரம் ரூபாய்க்கு தந்தையே குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் அந்த சிறுவனை மீட்ட அதிகாரிகள், தர்மபுரியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றனர். சிறுவனை குத்தகைக்கு கொடுத்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…