ரூபாய் 96,46,000 வழங்கி ” சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் ” என்று நிரூபித்து காட்டியது திமுக..!!

Published by
Dinasuvadu desk

அறிவித்தபடி ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு வழங்கிய திமுக MLA , MP க்கள்

கொச்சி ,

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை கேரளாவை மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியது.இதனால் கேரளா மக்கள் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர். மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். இந்நிலையில் கேரளாவுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் , அரசியல் கட்சிகள் உதவி அறிவித்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மக்கள் , மாணவர்கள் , அரசியல் கட்சியினர் ,அரசு ஊழியர்கள்  மற்றும் பல்வேறு அமைப்பினர் கேரளா மக்களுக்கு பொருளாகவும் , பணமாகவும் உதவி வந்தனர்.

இந்நிலையில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட  அம்மாநில உட்கட்டமைப்புக்கு ஏற்ப்பட்டுள்ள  பாதிப்புகளை  சரி செய்து கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழக தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வந்தார்கள்.

இருந்தும் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக சார்பில் கேரள ஏற்பட்ட வெள்ள  நிவாரண பணிக்காக  திமுகவின் அனைத்து  சட்டமன்ற ,  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம்  வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதை தொடர்ந்து திமுக சார்பில் இன்று மாலை கேரளாவில் திமுக சார்பில் MP ,MLA க்களின் ஒரு மத ஊதியமாக 96,46,000 ரூபாயை கேரளாவின் அமைச்சர் இ.பி ஜெயராமன் அவர்களிடம் வழங்கினர்.இதில் திமுகவின் மா.சுப்பிரமணியம் MLA தலைமையில் MLA க்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

DINASUVADU 

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago