ரூபாய் 96,46,000 வழங்கி ” சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் ” என்று நிரூபித்து காட்டியது திமுக..!!

Default Image

அறிவித்தபடி ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு வழங்கிய திமுக MLA , MP க்கள்

கொச்சி ,

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை கேரளாவை மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியது.இதனால் கேரளா மக்கள் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர். மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். இந்நிலையில் கேரளாவுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் , அரசியல் கட்சிகள் உதவி அறிவித்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மக்கள் , மாணவர்கள் , அரசியல் கட்சியினர் ,அரசு ஊழியர்கள்  மற்றும் பல்வேறு அமைப்பினர் கேரளா மக்களுக்கு பொருளாகவும் , பணமாகவும் உதவி வந்தனர்.

இந்நிலையில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட  அம்மாநில உட்கட்டமைப்புக்கு ஏற்ப்பட்டுள்ள  பாதிப்புகளை  சரி செய்து கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழக தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வந்தார்கள்.

இருந்தும் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக சார்பில் கேரள ஏற்பட்ட வெள்ள  நிவாரண பணிக்காக  திமுகவின் அனைத்து  சட்டமன்ற ,  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம்  வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதை தொடர்ந்து திமுக சார்பில் இன்று மாலை கேரளாவில் திமுக சார்பில் MP ,MLA க்களின் ஒரு மத ஊதியமாக 96,46,000 ரூபாயை கேரளாவின் அமைச்சர் இ.பி ஜெயராமன் அவர்களிடம் வழங்கினர்.இதில் திமுகவின் மா.சுப்பிரமணியம் MLA தலைமையில் MLA க்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்