ரிஷப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ?

Default Image

ரிஷப ராசிக்காரர்களே!
இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அஷ்டமத்துச் சனி நடந்தாலும் ராசிநாதன் சஞ்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும்.
மனத்தெளிவு ஏற்படும். குடும்பத்தினரின் செய்கைகள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கும். பெண்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். அரசியல்வாதிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்குக் கல்வி  பற்றிய கவலை ஏற்படும். பதற்றத்தைக் குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 3, 6, 9
பரிகாரம்: ரங்கநாதரைத் தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்