16 வயது சிறுமியை ராமநாதபுரத்தில் ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், கடந்த சில நாட்களாக உடல் சோர்வுற்று இருந்ததால், அவளது பெற்றோர் புதனன்று ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கொட்டகை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், பழனிசெல்வம், மதன், சதீஷ்குமார், பிரதாப், பாலமுருகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 28-ஆம் தேதி பரத்தின் ஆட்டோவில் சிறுமியை கடத்திச் சென்று, பாப்பாக்குடி என்ற இடத்தில் வைத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…