ரஜினிகாந்துக்கு வந்த ரகசிய கடிதம்..!காலா வெற்றி பெற 1000 மடங்கு வியாபாரியாக ரஜினி மாறியுள்ளார்!

Published by
Venu

பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி,காலா திரைப்படம் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் எதிர்ப்பு இல்லாமல் எளிதாக  வெற்றி பெற 1000 மடங்கு வியாபாரியாக சிந்தித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாக ரஜினிகாந்திற்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து  பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காலா திரைப்படத்தின் முக்கிய நோக்கமே மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பது, காவல்துறையை தவறாக சித்தரிப்பது என்பதாகவே தெரிகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற அறவழி போராட்டம் வன்முறையாக மாறியதும், அதில் அப்பாவி பொதுமக்கள் காவல்துறையினரின்  13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும், காலா திரைப்பட காட்சிகளோடு ஒத்துப் போவதை அறிந்து திரைப்படத்தை வெளியிட கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் முன்னதாகவே நன்கு உணர்ந்திருக்கிறீர்கள்.

ஏற்கனவே காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் காலாவை வெளியிட கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல்  திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலை உங்களது காலா  திரைப்படத்திற்கும் வந்து, அதன் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு விடுமோ என சிந்தித்த தாங்கள், நீங்களாகவே முந்திக்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சமூக விரோதிகள் போலவும், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிப் போகும் எனவும் பேசி மத்திய, மாநில ஆட்சியாளர்களின் ஆதரவையும், காவல்துறையினரின் ஆதரவையும் பெற முயற்சி செய்திருப்பது தங்களின் தொடர் பேச்சுக்கள் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

மேலும் “காலா” திரைப்படத்தில் நடித்த நீங்கள் தலைசிறந்த நடிகர்  என்பதை தற்போது நிஜ வாழ்விலும் நிருபித்துள்ளீர்கள். உங்கள் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக மக்களின் உரிமைப் போராட்டங்களையும், அறவழியில் போராடுபவர்களையும் கொச்சைப்படுத்துவதையும், போன்ற போலியான நடவடிக்கைகளையும், அறிக்கைகளையும் இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள். காலா திரைப்படம் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் எதிர்ப்பு இல்லாமல் எளிதாக  வெற்றி பெற 1000 மடங்கு வியாபாரியாக ரஜினி மாறியுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் பால் முகவர்கள் சங்கத்தலைவர் பொன்னுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

10 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

12 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

17 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

38 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

38 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

50 mins ago