மொய் வசூலுக்கென்றே நடத்தப்பட விழா..! கணினிமயமானது ‘மொய் விருந்து’..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினிமயமானது ‘மொய் விருந்து’-நெரிசலை தவிர்க்க புதிய ஏற்பாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கொத்தமங்கம், அணவயல் உள்ளிட்ட பகுதியில் மொய் விருந்து விழா எனும் பிரத்யேக விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில், சுமார் 2௦௦௦௦பேர் சேர்ந்து ஒரே இடத்தில் நடத்தப்படும் இவ்விழாவில் அதிகபட்சமாக ஒரு டன் வரை ஆட்டுக் கறி சமைத்து அசைவ உணவு பரிமாறப்படுகிறது.
இப்பகுதியில் தனி நபருக்கு அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை மொய் வசூலாகி உள்ளது. சுமார் 25 ஆயிரம் பேர் மொய் வரவு- செலவு வைத்துள்ள இப்பகுதியில், நிகழாண்டில் சுமார் 2 ஆயிரம் பேர் மொய் விருந்து விழா நடத்த உள்ளனர்.