"மொத்த பூ கடைகளுக்கும் சீல்"உயர்நீதிமன்றம் உத்தரவு…

Published by
Dinasuvadu desk

சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளின் வர்த்தகத்தில் அரசு அதிகாரிகள் தலையிட தடை விதிக்க வேண்டும் என முருகன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, 22 ஆண்டுகளுக்கு முன்பே கடைகளை காலி செய்ய அரசு உத்தரவிட்டும், சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பூக்கடைகளின் உரிமையாளர்கள் அரசு வைத்த சீலை உடைத்து மீண்டும் வர்த்தகம் செய்து வருவதாக விளக்கமளிககப்பட்டது.
அவர்களை அங்கு தொடர்ந்து வர்த்தகம் செய்ய அனுமதித்தால் மக்களுக்கு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் நம்பிக்கை இழக்க செய்துவிடும் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் அந்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், சீல் வைக்கும் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும், அந்த பகுதியில் காவல் உதவி மையம் அமைத்து மீண்டும் கடைகள் திறக்காத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே வைக்கப்பட்ட சீலை உடைத்தவர்கள் மீதான வழக்குகளை தொடர்ந்து நடத்த அறிவுறுத்திய நீதிபதி, கடைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அக்டோபர் 22 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்..
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

5 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

10 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

10 hours ago