மேகதாது அணை விவகாரம்..!கர்நாடக மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு..!!!

Published by
kavitha
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சுமார் 5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு சாத்திய கூறு இருப்பதாக தனது அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.ஆனால் இதனை தமிழக அரசு எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம் ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக  மாநில நீர்ப்பாசனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Related image

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தை கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்ற உள்ள நிலையில் அனுமதி வழங்கிய மத்திய அரசு மற்றும் திட்டத்தில் உறுதியாக உள்ள கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் மத்திய நீர்வள ஆணைய திட்ட அனுமதி இயக்குநராக இருக்கும் என். முகர்ஜி மற்றும் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் கர்நாடக மாநில காவிரி நீராவாரி நிகாம் நிறுவன நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜூன் பி குகே மற்றும் கர்நாடக மாநில நீர்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் அம்மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் ஆகியோர் மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கானது கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இருமாநில காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 
மேலும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டு குறிப்பிடப்படும் 5 பேரையும் நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் மற்றும் கர்நாட அரசிற்கு  அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு செயல்களில் கர்நாடகவோ , மத்திய அரசோ தலையீடாமல் இருக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago