மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் -முதல்வர்..!!

Published by
kavitha

சென்னை விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை வண்டலூர் வரை நீட்டிப்பது பற்றி ஆய்வு நடத்தப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, 28 கிமீ தூரம் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக நேரு பூங்கா – எழும்பூர் – சென்ட்ரல் (2.7 கிமீ) மற்றும் சின்னமலை – டிஎம்எஸ் (4.5 கிமீ) வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடக்க விழா எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங்புரி, பொன்.ராதாகிருஷ்ணன், பேரவைத் தலைவர் தனபால் மற்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சென்ட்ரல், எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, முதல்வரும் ஹர்தீப்சிங் புரியும் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, அனைவரும் ரயிலில் பயணம் செய்தனர்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் பங்கஜ்குமார் பன்சால் உட்பட பலரும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago