மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
நாளை மு.க.அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்த இருக்கிறார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி அவர்கள் செல்ல இருக்கிறார்கள்.
இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. இதற்காக சில மதுரை நிர்வாகிகள் இப்போதே, சென்னைக்கு சென்று ஏற்படுகள் செய்து வருகிறார்கள். இதையடுத்து இன்று அதிகாலை அழகிரி சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் திமுக நிர்வாகி ரவி வரவேற்றார்.
இதன் திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்றத்தால் ரவிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்துவது கட்சி விரோதச் செயலா? அப்படியென்றால் எத்தனை லட்சம் பேரை கட்சியிலிருந்து நீக்குவார்கள் என்பதையும் பார்ப்போமே என்று துரை தயாநிதி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…