மு.க.அழகிரியை நேரில் அழைக்கச் சென்ற திமுக நிர்வாகி நீக்கம் …!இன்னும் எத்தனை லட்சம் பேரை கட்சியிலிருந்து நீக்க முடியும் ….!மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுகவிற்கு சவால்

Default Image

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

நாளை மு.க.அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்த இருக்கிறார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி அவர்கள் செல்ல இருக்கிறார்கள்.

Image result for அழகிரி

இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. இதற்காக சில மதுரை நிர்வாகிகள் இப்போதே, சென்னைக்கு சென்று ஏற்படுகள் செய்து வருகிறார்கள். இதையடுத்து இன்று அதிகாலை அழகிரி சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் திமுக நிர்வாகி ரவி வரவேற்றார்.

இதன்  திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்றத்தால் ரவிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.

Image result for அழகிரி

இந்நிலையில்  மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,  மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு   மவுன அஞ்சலி செலுத்துவது கட்சி விரோதச் செயலா? அப்படியென்றால் எத்தனை லட்சம் பேரை கட்சியிலிருந்து நீக்குவார்கள் என்பதையும் பார்ப்போமே என்று துரை தயாநிதி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்