கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் மட்டும் தேவையற்ற விமர்சனம் செய்வதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி,பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியும் உடனிருந்தார்.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவுகள் அந்தந்த மையங்களில் தயாரிக்கப்பட்டாலும் நாகை ஒருங்கிணைந்த மையத்தில் தயாராகும் உணவு மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக தயாரித்து அனுப்பப்படுகிறதா என்பதை அமைச்சர்கள் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட காய்கறி,அரிசி போன்றவையும் தரமாக இருக்கிறதா எனவும் அவர்கள் கேட்டறிந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் தேவையற்று அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
DINASUVADU.COM
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…