முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது எப்படி… அப்பல்லோ பதிலளிக்க உத்தரவு…

Published by
kavitha

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி  ஜெயலலிதா, 2016 செப்டம்பரில், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, இரண்டரை மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2016 டிசம்பர், 5ஆம் தேதி  உயிரிழந்தார்.  இவரது மரணம் குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டதா, தவறுகள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரிக்க, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை துரிதமாக நடந்து வந்த நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டது. கமிஷனின் உறுப்பினர்களுக்கு, மாநில அரசு ஊதியம் வழங்கி வருகிறது. எனவே, விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, நீதிமன்றம் விலக்கி கொள்ள வேண்டும் என்று  மனுதாக்கல்  செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ‘தமிழக அரசின் மனு மீது, இரண்டு வாரத்திற்குள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்’ என, நீதிபதிகள்
உத்தரவிட்டு, வழக்கை, அடுத்த மாதம், 12க்கு ஒத்தி வைத்தனர்.

Published by
kavitha

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago