திருச்சி மாவட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்டது ஒட்டம்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் மந்தை உள்ளது இது அரசுக்கு சொந்தமான பொது இடம் ஆகும். இந்த இடத்தில் 5 அடி உயரத்தில் சுதையால் தயாரிக்கப்பட்ட மற்றும் தங்க நிற வண்ணப்பூச்சு அடிக்கப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலை முன் அனுமதி பெறாமலே நேற்று இரவு நிறுவப்பட்டது.
அனுமதியின்றி நிறுவப்பட்ட தகவலறிந்து அங்கு வந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார், மற்றும் துறையூர் வட்டம் காவல் ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்டோர் உடன் உப்பிலியபுரம் போலீஸாரும் விரைந்தனர்.அவர்களோடு துறையூர் வட்டாட்சியர் அமுதா அவருடன் வருவாய் துறையினர் இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் ஒட்டம்பட்டிக்கு சென்றனர்.
இந்நிலையில் முன் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட சிலையை போலீசாரின் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் அகற்றினர்.அவ்வாறு அகற்றப்பட்ட அச்சிலையை உப்பிலியபுரத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து முன் அனுமதியின்றி சிலை வைத்தவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…