முதல் நாடகம்! முதல் திரைப்படம்! கலைஞர் எனும் முதல் பட்டம்! மு.கருணாநிதி நினைவுகள் 2019!

Published by
மணிகண்டன்

கலைஞர் கருணாநிதி அரசியலில் எவ்வளவு பெரிய சாணக்கியர் என்பது பற்றி நாம் அறிந்ததே. அதே போல தனது தமிழ் இலக்கியத்தை தனது எழுத்தின் மூலம் சாமானியனுக்கு கடத்தியவர் கலைஞர்.

அவர் முதன் முதலாக தனது எழுத்துக்களை கோர்த்து மக்களுக்கு படைத்த முதல் நாடகம் பழனியப்பன். இந்த நாடகம் திருவாரூரூரில் 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.

 

அதனை தொடர்ந்து 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அறிமுகமான ராஜகுமாரி படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது தனித்துவமான தமிழின் மூலம் திரையுலகில் மெல்ல மெல்ல தமிழ் திரையுலக தமிழையும் சேர்த்து வளர்த்து வந்தார் எனபதே உண்மை!

புரட்சி திலகம் எம்ஜிஆருக்கு மந்திரகுமாரி மலைக்கள்ளன் என இரு வெற்றி படங்களையும், நடிகர் திலகம் சிவாஜிக்கு முதல் படமே முத்திரை பதிக்கும் வண்ணம் வசனத்தை எழுதி இந்திய திரையுலகையே உற்றுநோக்க வைத்தார் கலைஞர். பிறகு சிவாஜிக்கு மனோகரா எனும் படத்தையும் தனது வசனத்தால் கவனிக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

 

1947 முதல் 2011 வரை சுமார் 64 திரைப்படங்களுக்கு தனது தமிழை கதை, வசனம், பாடல்கள் என தனது எழுத்து மூலம் மெருகேற்றியவர் கலைஞர் கருணாநிதி.  கடைசியாக ஸ்ரீ ராமானுஜர் எனும் நாடகத்திற்கு வசனம் எழுதுகையில் அந்த இளைஞனுக்கு வயது 92 மட்டுமே.

இது போக புத்தகங்கள் வாயிலாகவும் தனது தமிழ் வேட்கையை தீர்த்துக்கொள்ள முயற்சித்தவர் கலைஞர். இனியவை 20, கலைஞரின் கவிதை மழை என 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  நெஞ்சுக்கு நீதி எனும் தலைப்பில் தனது சுயசரிதையை குங்குமம் மற்றும் முரசொலியில் எழுதியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி எனும் நாம் கூப்பிட காரணமாயிருந்த முக்கிய நபர் நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். அவர்தான் கருணாநிதிக்கு கலைஞர் எனும் பட்டத்தை வழங்கியுள்ளார். மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்போதும் கருணாநிதியை ஆண்டவரே என்றுதான் அழைப்பாராம்.

Recent Posts

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

18 minutes ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

1 hour ago

உயிரினங்கள் வாழும் இன்னொரு கோள்? கண்டுபிடித்து அசத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிகு மதுசூதன்!

கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில்,  உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…

2 hours ago

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

12 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

14 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

14 hours ago