முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 3,120 கோடி ஊழல்..!ஆளுநரிடம் ஸ்டாலின் பரபரப்பு புகார்..!

Published by
Venu

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம்  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  புகார் மனு அளித்தார்.

இந்த புகார் மனுவில் அவர் கூறியதாவது:-

ஜூலை 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் நாகராஜன் செல்லத்துரையின் சொந்த நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பதை ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.180 கோடி ரூபாய் பணமும், 105 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கமும் இந்த சோதனையின் போது  பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் சோதனைகளும், விசாரணைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தனது உறவினர்களுடன் இணைந்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  செய்த குற்றத்தின் மூலமும், தனது உறவினர்களுடன் கூட்டுச் சதி செய்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலம் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார்.

13.6.2018 அன்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மீது திமுக உறுப்பினர் ஆர். எஸ் பாரதி  சட்டவிரோதமாக அளித்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஊழல்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஆணையர் மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் ஆகியோருக்கு ஏற்கெனவே புகார் அளித்திருக்கிறார்.

3,120 கோடி ரூபாய் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் மீதும்,  ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி அதில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன் என்று  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago