முடிந்தது ஊராட்சி…வருகிறது மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்.

Default Image
  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • அடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர்  அறிவிப்பு. 

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு கடும் இழுபறிகளுக்கு நடுவில் இரு கட்டங்களாக ஒரு வழியாக நடைபெற்றது.வாக்கு எண்னிக்கையானது ஜன.,2ல் தொடங்கியது.ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் களமிரங்கியது.இதில் இரு கட்சிகளும் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றி இருந்தாலும் திமுக கூட்டணி சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற அனைவரும் ஜன.,6 அந்தந்த பதவிகளுக்கு பதவி ஏற்கின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தலை நடத்த தயாராகி வருவதாக செய்திகள் கசிய தொடங்கிய நேரத்தில் தான் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வெகு சிக்கிரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக வட்டாரத் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்