திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த 6ம் தேதி தனது மனைவி ஜோதியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மனைவி 3வதாக கர்ப்பமாகியுள்ளதாகவும், கருக்கலைப்பு செய்யும்படி தெரிவித்துள்ளார். இதற்கு மறுத்த பெண் டாக்டரை செல்போனில் படம் பிடித்து அதை முகநூலில் ஆபாசமான கருத்துக்களுடன் விஜயகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து விஜயகுமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைதுசெய்தனர். இதற்கிடையே முகநூலில் டாக்டர் போட்டோ வெளியானதை கண்டித்தும், மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48ன் படி விஜயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையில் இன்று காலை முகநூலில் போட்டோ பதிவிட்டதால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மருத்துவமனை அனுமதித்து திவீர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…